‘பொன்னியின் செல்வன்’ டிரெய்லர் மற்றும் ஆடியோவை சென்னையில் இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொழில்துறையைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நிகழ்வில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
‘பொன்னியின் செல்வன்’ தமிழ் மிகப் பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும், மேலும் பிரம்மாண்டமான படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் வழக்கமான புதுப்பிப்புகளுடன் படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர், மேலும் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதன் மூலம் விரிவான விளம்பரத்துடன் தொடங்க உள்ளனர். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் கார்த்தி ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் தொற்றுநோய்க்கு மத்தியில் வெறும் 140 நாட்களில் படமாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதன் பின்பு தான் விக்ரம் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். படம் தற்பொழுது எடுத்து முடிக்கப்பட்டு நிலையில், இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு முக்கியத்துவம் கொடுத்து,இது ஜெயம் ரவிக்கான படம் என்பது போன்று உருவாகியுள்ளதால், படத்தின் இயக்குனர் மணிரதத்தினம் மற்றும் ஜெயம் ரவி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் விக்ரம்.
இதனால் கடும் கோபத்தில் இருந்த விக்ரம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவை புறக்கணிக்க முடிவு செய்து, அன்றய தினத்தில் உடல்நிலை சரியில்லை என தெரிவித்து திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் விக்ரம்.தொடர்ந்து பொன்னியின் செல்வன் அடுத்தடுத்த பிரமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த விக்ரமை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் மணிரத்தினம்.
இருந்தும் தான் நடிக்கும் கோப்ரா படத்தில் பிசியாக இருப்பதால், பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என தட்டி கழித்து வந்த விக்ரம். இது ஜெயம் ரவிக்கான படம் அதனால் அவரை வைத்தே இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்துங்க என விக்ரம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஜெயம் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டால், ஜெயம் ரவி படத்தில் நான் நடித்துள்ளேன், என்பது போன்று அமைந்துவிடும் என விக்ரம் தெரிவிக்க. அதற்கு ஒரு கட்டத்தில் எப்படியாவது விக்ரமை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பதற்காக, ஹைதராபாத்தில் நடக்கும் சிக்கில் டீசர் வெளியிட்டு விழாவில் ஜெயம் ரவி கலந்து கொள்ள மாட்டார், இது உங்களுக்கான நிகழ்ச்சி என இயக்குனர் தரப்பு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்பு தான் ஹைதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் சிங்கிள் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொண்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்து நடக்கும் புரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மேடையில் இருவரும் பங்கேற்கும் வகையில் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் நேற்று ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவை சேர்ந்த சியான் விக்ரம், கார்த்தி, மணிரத்னம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.