நடிகர் தனுஷ் 2004ம் ஆண்டு ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.
திடீரென சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவும், தனுஷும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஆனாலும், ஐஸ்வர்யாவின் முயற்சிகளுக்கு தனுஷ் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தார். அதில், தனது தோழி ஐஸ்வர்யா என அவர் குறிப்பிட்டு வந்தார். மேலும், லிங்கா, யாத்ரா இருவரும் அப்பா தனுஷ் மற்றும் அம்மா ஐஸ்வர்யா என மாறி மாறி இருவருடனும் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், தனுஷின் மூத்த மகன் லிங்கா அவர் படிக்கும் பள்ளியில் விளையாட்டு போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அனைவரும் ஒன்றாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘சீக்கிரம் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துருங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.