Wednesday, May 1, 2024 4:45 am

என்னை அறிந்தால் இரண்டாம் பாகம்.! ரகசியத்தை ஓப்பனாக கூறிய அருண்விஜய் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்ராக்கர்ஸ் என்ற பைரசி இணையதளம் சில மாதங்களிலேயே தமிழ் திரையுலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. ஒரு கட்டத்தில், திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நாளில் திருட்டுப் படங்களை வெளியிட்ட சட்டவிரோத இணையதளம், திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீண்ட காலமாக, அச்சுறுத்தலுக்கு முடிவே இருக்காது என்று தோன்றியது. ஆயினும்கூட, மோசமான நெட்வொர்க்கை நடத்துபவர்களின் தொடர்ச்சியான கைதுகளுக்குப் பிறகு விஷயங்கள் நன்றாக மாறியது.

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் முதன் முதலாக முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து இயக்குனர் சேரன் இயக்கிய பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார், பாண்டவர் பூமி திரைப்படம் குடும்பத் திரைப்படம், அதனால் ஒட்டுமொத்த மக்களும் படத்தை ரசித்துப் பார்த்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்து ஹிட்டான என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் தான் அருண் விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, இந்த திரைப்படத்திற்கு பிறகு அருண்விஜய் தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அருண்விஜய் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார், அந்த பேட்டியில் அவர் கூறியதாவது என் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் என்னை அறிந்தால் மற்றும் தடையறத் தாக்க, இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்ட்-2 பண்ணவேண்டும் என தனது ஆசையை அறிவித்தார்.

மேலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டரை சுட்டதை நீங்கள் யாரும் பார்க்கவில்லை விக்டர் இறந்தாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது, தல அஜித் அதற்கான வாய்ப்பை கொடுத்தால் என்னை அறிந்தால் 2 எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என பல நாள் ரகசியத்தை ஓபனாக பேசினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்