Tuesday, April 30, 2024 12:29 am

ரொம்ப ஆசைப்பட்டு நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை !! கசிந்த உண்மை…கவலையில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச் வினோத் இயக்கிய ‘அஜித் 61’ படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அஜித் தயாராகி வருகிறார், மேலும் இறுதி அட்டவணை விரைவில் புனேவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய பகுதிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அஜித் மற்றும் படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் அட்டவணையில் இணைகிறார்கள்.நடிகர் அஜித் மறைந்த மலையாள இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க விருப்பப்பட்ட நிலையில் அது நிறைவேறாமலே போய் விட்டது.

மலையாளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிஜூ மேனன், பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.சச்சிதானந்தம் எழுதி இயக்கிய இப்படம் அந்த ஆண்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னால் மலையாளத்தில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் ரீமேக் ஆனது. தமிழிலும் இப்படத்தை ரீமேக் செய்ய சொல்லி ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர்.

சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு சிறந்த இயக்குநர், துணை நடிகர், பாடகி, சண்டை இயக்கம் ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது. ஆனால் 47 வயதான சச்சிதானந்தம் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் உலுக்கி எடுத்தது.

இந்நிலையில் சச்சிதானந்தம் மனைவி சிஜி சச்சி வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் அதை வாங்க சச்சி இல்லாதது மிகுந்த வருத்தமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் 2016 ஆம் ஆண்டு சபரிமலைக்குப் போய்விட்டு திரும்பி வரும் போது ஹோட்டலில் தங்கிய அவருக்கு இடுப்புக்குக் கீழே தளர்ந்துபோனது. மருத்துவ பரிசோதனையில் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பலமுறை இடுப்புக்குக் கீழ் தளர்ந்துபோவதும் சிகிச்சைக்குப் பின் சரியாவதுமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு பலமுறை இடுப்புக்குக் கீழ் தளர்ந்துபோவதும் என்ற நிலையில் அய்யப்பனும் கோஷியும் அய்யப்பனும் முடித்து ஆபரேஷன் செய்யலாம் என நினைத்தார். கடுமையான வலிக்கு நடுவில் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஷூட்டிங் நடத்தினார்.

ஒருமுறை அய்யப்பனும் கோஷியும் பார்த்துவிட்டு சச்சியிடம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித் பேசினார். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் உங்களுடன் ஒரு படம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதுபற்றி பேச நான் கொச்சி வரட்டுமா என கேட்டார். அதற்கு சச்சியோ இப்போது வேண்டாம்.

ஒரு ஆபரேஷனுக்காகப் போகிறேன். ஆபரேஷன் முடிந்த பிறகு நான் சென்னையில் வந்து பார்க்கிறேன் என அஜித்திடம் சொன்னார். ஆனால் அந்தச் சந்திப்பு நடக்காமலே போனது என சிஜி சச்சி கூறியுள்ளார்.அஜித் தொடர்ந்து நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார், மேலும் திறமையான நட்சத்திரம் அடுத்த முறை மேலும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் உணர்ச்சிவசப்பட்ட நட்சத்திரத்தின் திறமையைப் பாராட்டி, வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்