தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி. அனைத்து பிரபலங்களுக்கும் அன்பானவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். இவரது ஸ்டைலை பின்பற்றி சமூக வலைதளங்களில் பல பதிவுகளை போட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இத்தனை அன்புக்கும் உரிய ரஜினி ஆரம்பகாலத்தில் பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இவர் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் மக்களை ஆட்கொண்டு வந்தார். தலைமுடியைவித்தியாசமான முறையில் ஸ்டைலாக சிலுப்புவது போன்ற பலவித பரிமாணங்களால் மக்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
அப்படி பட்ட தலைமுடியை தற்போது இழந்து வெறும் வழுக்கை தலையுடன் வெளி இடங்களில் காட்சி தந்து வருகிறார்.அதற்கான காரணத்தையும் ஒரு மேடையில் வெளிப்படையாக கூறினார். அவரது 18, 19 வயதில் இருந்தே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டதாம். அதற்காக டைகளை பின்பற்றி வந்தாராம்.
30 வயதுக்கும் மேல் ஏராளமான டைகளை உபயோகப்படுத்த தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட தொடங்கிவிட்டதாம். அதன் பிறகு தான் இருக்கிற முடியை இழந்து இப்பொழுது இப்படி இருக்கிறேன் என கூறியுள்ளார்.