- Advertisement -
இந்தாண்டு ஹங்கேரியில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த போட்டியில், ஈட்டி எறிதலில் கலந்து கொண்ட இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் சுமார் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுக்கால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி பெருமை சேர்த்துள்ளார்.
- Advertisement -