தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி படமாகவும் தேசிய விருது படமாக அமைந்தது ஆடுகளம். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை டாப்ஸி பண்ணு நடிகையாக அறிமுகமாகினார். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய டாப்ஸி இதனை அடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் போதிய வரவேற்பும் வெற்றியும் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். க்ளாமரில் எல்லைமீறி நடித்தும் சர்ச்சையான பேச்சினை பேசியும் பரபரப்பை ஏற்படுத்தினார். வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்து வரும் டாப்ஸி, தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். உடலுறவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு வரும் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையா என்று கேட்டுள்ளார்.
அதற்கு டாப்ஸி, காஃபி வித் கரண நிகழ்ச்சியில் அழைக்கும் அளவிற்கு என் செக்ஸ் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்ட பத்திரிக்கையாளர்கள் ஷாக்காகியுள்ளனர்.
சமீபத்தில் கூட நடிகை கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட கரண் நிகழ்ச்சியில் உடலுறவு எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியும் அதற்கு கத்ரீனா சகஜமான பதிலை அளித்ததாகவும் கூறப்படுகிறது.