பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த இயக்குனர் வெற்றி மாறன் மீண்டும் நடிகருடன் இணைந்து பணியாற்றவுள்ளார். பல பிரபலங்கள் கலந்து கொண்ட தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, வெற்றி மாறனிடம் வட சென்னை 2 படத்தின் வேலைகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இயக்குனர் தனது வரவிருக்கும் படங்களுக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என்று கூறினார்.
தமிழில் உச்ச நட்சத்திரமாக இருந்து பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். வடசென்னை, அசுரன், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு மாறன், ஜகமே தந்திரம் போன்ற தோல்வி படங்களை கொடுத்தார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காமல் இருக்க தனுஷின் விவாகரத்து தான் காராணம் என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் எதார்த்தமாக நடந்ததா அல்லது திட்டமிட்டு தோல்வியை சந்தித்தாரா என்பது பலருக்கும் புரியாமல் இருந்தது. தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்காக மிகவும் எதிர்ப்பார்ப்போடு இருந்து வருகிறார்.
அந்த படத்தின் அப்டேட் கூட கூறாமல் அனிருத் அமைதியாக இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்னவோ இருக்கலாம் படத்தின் பாடல்கள் கூட தனுஷுக்கு அமையவில்லை.
தனுஷ் – அனிருத் கூட்டணி என்றால் உலகம் வரை பரவும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது இசையும் தனுஷுக்கு வில்லனாக அமைந்துள்ளது. எப்படியாவது போராடி தியேட்டரில் படத்தை கொண்டு வர தனுஷ் தன் பங்கிற்கு சில வேலைகளையும் செய்து வருகிறார்.
அதற்கு உடனே ஆடியோ வெளியீட்டையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அப்படி யோசித்து ஒருபடியாக இன்று ஆடியோ வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் தனுஷ். நடந்த ஆடியோ வெளியீட்டிற்கு அனிருத் வந்தது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார்.
பல நாட்களாக இழுத்தடித்து வெளியாககாமல் இருக்க காரணங்கள் பல இருக்கிறது. தியேட்டரில் வெளியிட அனுமதி மறுக்கப்படுகிறதா இல்லை யாராவது இதன் பின்னால் இருக்கிறார்களா என்று ரசிகர்கள் யோசித்தும் வருகிறார்கள். இப்படம் வெளியாகினால் தான் தனுஷுன் மார்க்கெட் மீண்டும் எகிறும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தனுஷிடம் நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்கள் பல்வேறு கட்டத் தயாரிப்பில் உள்ளன. மறுபுறம், வெற்றியின் வரவிருக்கும் திட்டங்களில் விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகியவை அடங்கும்.