பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சாதாரண பெண்கள் கூட இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். இதையெல்லாம் கூறமுடியாமல் தனக்குள் புதைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் சினிமாத்துறையில் இதுபோன்ற சம்பவங்களை பெண் கலைஞர்கள் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அப்படி ஒரு காமெடி நடிகர் பெண் இயக்குனரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது.
தன்னுடைய வித்தியாசமான நடிப்பில் பெரிய நிறுவனத்தின் தயரிப்பில் நடித்துள்ளார் அந்த காமெடி நடிகர். படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் பெண் உதவி இயக்குனர் ஒருவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
அந்த பெண்ணிடம் காமெடி நடிகர் டபுள் மீனிங்கில் பேசுவது, அசிங்கமாக பேசுவது, தொட்டு நடந்து கொள்வதுமாக டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். இது குறையாத நிலையில் இரவு வீட்டுக்கும் கூப்பிட்டுள்ளார் அந்த காமெடி நடிகர்.
தாங்க முடியாத அந்த பெண், தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடம் சென்று புகாரளித்திருக்கிறார்.
ஆனால் அந்த தயாரிப்பாளர் இனிமேல் ஷூட்டிங்கிற்கு வரவேண்டாம் என்று கூறி அனுப்பி இருக்கிறார். இதனால் அந்த பெண் இயக்குனர் அங்கிருந்து செனறிருக்கிறார்.