- Advertisement -
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் 2 ரசிகர்கள் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்பவரும், மேற்குவங்கம் பெங்குரா பகுதியைச் சேர்ந்த ராகுல் லோகர்(23) என்பவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -