சென்னை சந்தையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.45,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,400 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.4,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ரூ. 79. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்குக் காரணம், சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வதே ஆகும். அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது.
இந்த விலை உயர்வு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.