Thursday, December 7, 2023 8:59 am

மதுபோதையில் தாறுமாறாக ஜேசிபி ஓட்டி விபத்து : போலீஸ் வழக்குப்பதிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற வாரச் சந்தையின்போது, மதுபோதையில் ஜேசிபி வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டிய பீகார் இளைஞர் ராஜ்குமாருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர் பொதுமக்கள்

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் கூறுகையில், “மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹாசனூர் தாலுகாவில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் வாரச் சந்தை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (நவம்பர் 14ஆம் தேதி) காலை சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுபோதையில் ஜேசிபி வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டி வந்தார். சாலை ஓரத்திலிருந்த கடைகளில் ஏற்றி பொருட்சேதம் விளைவித்தார்” என்றார்

இதையறிந்த பொதுமக்கள், ராஜ்குமாரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜ்குமாருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையின் தீமைகளை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்