நடிகர் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடா முயர்ச்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4, 2023 முதல் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த அஜர்பைஜான் படப்பிடிப்பு அட்டவணை முடிவடைந்துவிட்டதாகவும், அதில் ஒரு ரேஸி கார் ஆக்ஷன் சீக்வென்ஸும் இருப்பதாகவும் பரவலாக அறிவிக்கப்பட்டது.மற்றொரு வெளிநாட்டு அட்டவணைக்காக அணி துபாய்க்கு நகரும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் விடா முயர்ச்சி படப்பிடிப்பு இன்னும் அஜர்பைஜானில் நடந்து வருவதாகத் தெரிகிறது, மேலும் குழு துபாயில் படப்பிடிப்பை நடத்துமா என்பதைப் பார்க்க வேண்டும்.மகிழ் திருமேனி இயக்கத்தில் த்ரிஷா நாயகியாகவும், அனிருத் இசையமைக்கவும் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமான இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவும், என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளார் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரையரங்குகளில் வழங்கவுள்ளது.
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு துபாய் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.
இப்படியான சூழ்நிலையில், சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபுதாபியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் கடந்த அக். 4ம் தேதி தொடங்கியது.
இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். படப்பிடிப்பு துவங்கி பத்து நாள் கூட ஆகாத நிலையில் இஸ்ரேல் நாட்டில், போர் தொடங்கி நடந்து வந்தது. ஆனால் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அஜர்பான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் சென்றுள்ளதாகவும் அங்கு சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல துணை நடிகரான ஜீவா ரவி விடாமுயற்சி படத்தில் இணைத்துள்ளதாக அவர் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Actor JeevaRavi Sir… Next Schedule Join For #VidaaMuyarchi… Movie 🎥 & Speak About #AjithKumar Sir ❤️🙏 pic.twitter.com/m67yukpwPf
— Ajith Seenu 2 👑 DARK DEVIL… தல..தாய்..தாரம்.. (@ajith_seenu) November 14, 2023
மகிழ் திருமேனியின் விடா முயற்சி அஜீத் நடித்த அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் என்டர்டெய்னர் என்று கூறப்படுகிறது. ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்படுகிறது.