பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அதில், அவர் ”மழையால் அணைகள் நிரம்பினால், உடனடியாக தண்ணீர் திறந்துவிடும்போது, அது கரையோர மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட்டு, பின்னர் தண்ணீர் திறக்க வேண்டும்.
இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் முறையாக அமல்படுத்த வேண்டும். கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடும்போது, அது அவர்களால் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். மேலும், அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் பருவமழையால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாத நிலையைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது, தமிழ்நாடு முழுவதும் 400 பேரிடர் மீட்பு படை குழு, 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே, அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆட்சியர்களுக்கு உத்தரவு, அணை நிலவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன, வானிலை மையத்துடன் இணைந்து, அதற்கேற்றவாறு மழை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பேட்டியளித்துள்ளார்.