- Advertisement -
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது. இதனால், மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலை ரயில் பாதையில் சேதங்கள் ஏற்படாமல் இருக்க, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பருவமழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை நவம்பர் 16ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை ரத்து காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- Advertisement -