Sunday, December 3, 2023 12:56 pm

கேரளாவில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து சிறுமியை கடித்த நாயை அடித்துக்கொன்ற மக்கள்!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரளா : பாலக்காடு அருகே கோட்டோபாடம் பகுதியில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து, 6வது படிக்கும் சிறுமியைக் கடித்துக் குதறிய தெருநாய். இடுப்பில் காயங்களுடன் அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டோபாடம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு 6ம் வகுப்பு படிக்கும் சிறுமியொருவர் வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு தெருநாய் வகுப்பறைக்குள் புகுந்து, அந்த சிறுமியைக் கடித்துக் குதறியது. இதில், அந்த சிறுமியின் இடுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரேபிஸ் பாதிப்புடையதாகக் கூறப்படும் அந்த நாயை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அடித்துக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறைக்குள் நாய் புகுந்து மாணவியைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்