Friday, December 8, 2023 2:53 pm

ஆளுநர் மாளிகையின் பொய் குற்றச்சாட்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலடி!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் ரவியை விமர்சித்தார். அதில், ” ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக, ராஜ்பவனிலிருந்து திட்டமிட்டுப் பொய் பரப்பப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், அவர் ” தமிழக ஆளுநர் பாஜக்காரராக மாறியுள்ளார். ஆளுநர் மாளிகையும் பாஜக அலுவலகமாக மாறியுள்ளதுதான் வெட்கக் கேடு” எனக் கூறினார்.

” இந்த ராஜ்பவன் வெளியே உள்ள சாலையில்தான் அச்சம்பவம் நடந்துள்ளது என்பதை சிசிடிவி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது காவல்துறை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், அவர் ” தமிழ்நாடு புண்ணிய பூமி இங்கு ஆரியம், திராவிடம் என எதுவும் கிடையாது என்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருந்தை குறிப்பிட்டு, இன்னாருக்கு இதுதான் எனச் சொல்வது ஆரியம். எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்