Friday, December 8, 2023 5:16 pm

ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீச்சு : அமைச்சர் ரகுபதி விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அதில், “ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது. சாலையில் நடந்து சென்ற அந்த நபர் அதை வீசியுள்ளார், இந்த சம்பவத்தில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை. இதை வைத்து பாஜக அரசியல் செய்தாலும், அது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது” என்று கூறினார்.

மேலும், அவர்  “ஆளுநர் மாளிகைக்கு எதிராக நடத்தப்படும் எந்த சம்பவத்திற்கும், தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டில் அமைதி காத்து, எந்த சட்டவிரோத செயல்களுக்கும் அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது.” என்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்