Saturday, December 2, 2023 11:22 pm

கடைசி 10 ஓவர்களில் ஆட்டம் எங்களது கையை விட்டு சென்றது : வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்வியால் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் விரக்தி அடைந்துள்ளார். அவர் தனது பேட்டியில், “முதல் 25 ஓவர்களில் நாங்கள் நன்றாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை பெற்றோம், குயின்டன் டிகாக் மிகவும் அருமையாக விளையாடினார். கடைசி 10 ஓவர்களில் ஆட்டம் எங்களது கையை விட்டுச் சென்றது. எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு, போட்டியை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

வங்கதேச அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேச அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் குறிப்பாக, தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டிகாக் 174 ரன்கள் எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தனது பேட்டியில், “குயின்டன் டிகாக் மிகவும் அருமையாக விளையாடினார். அவர் எங்கள் பந்துவீச்சை எளிதில் கடந்து சென்றார். கடைசி 10 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சு தளர்ந்தது. அதுதான் எங்களுக்கு வினையாக அமைந்தது” என்று கூறினார்.

வங்கதேச அணி இந்த தோல்வியிலிருந்து மீண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற ஆவண செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்