Sunday, December 3, 2023 1:35 pm

புதுச்சேரி அமைச்சரின் பதவி நீக்கம் : குடியரசு தலைவர் ஒப்புதல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த 10ம் தேதி பிரியங்கா பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதற்கு முன்பதாகவே, அவரை பதவி நீக்கம் செய்த கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பி வைத்ததாகச் சபாநாயகர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

சந்திர பிரியங்கா தனது பதவியை விட்டுச் செல்லும் முன் அவரது கடிதத்தில், “ஜாதி, பாலின ரீதியில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்” என்று குறிப்பிட்ட கருத்து கடும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால், புதுச்சேரி அமைச்சரவையிலிருந்து பிரியங்கா நீக்கப்பட்டதற்கு, அவர் பணியில் சரியாகச் செயல்படாததே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரியங்காவைப் பதவி நீக்கம் செய்ய, முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்குக் கடிதத்தை அனுப்பி வைத்தார். இந்த கடிதத்தை, குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், பிரியங்காவைப் பதவி நீக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிரியங்காவின் பதவி நீக்கம், புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்