உத்தரகாண்ட் கலாதுங்கி சாலையில் கத்காட் பகுதியருகே நேற்றிரவு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இப்பேருந்தில் 32 பேர் பயணித்த நிலையில், அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து நைனிடால் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தைப் பற்றி நைனிடால் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கத்காட் பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 32 பேர் பயணித்தனர். விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.