- Advertisement -
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தனர். அப்போது கர்நாடகா, தொடர்ந்து குறைவாகவே தண்ணீர் திறப்பதாகத் தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியே தண்ணீர் திறக்கப்படுவதாகக் கர்நாடகா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது
மேலும், வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்; குறைவான மழை பெய்யும் காலங்களில் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீட்டது. இப்படி இருதரப்பினருக்கும் இடையே காரசார வாதம் நடந்தது. இதையடுத்து, இருதரப்பு வாதம் கேட்ட நீதிபதிகள், ” காவிரியிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரைத் திறக்க உத்தரவிட்ட, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்தக் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இது வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது
- Advertisement -