- Advertisement -
சென்னையில் சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த 3 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று(செப்.18) நள்ளிரவு ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிண்டி, வடபழனி, அசோக்நகர், கலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதேபோன்று கள்ளக்குறிச்சியிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வளிமண்டலத்தின் மேற்கு திசை வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப் .19) முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேசமயம், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -