பிரமாண்ட படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு ரசிகர்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் தனது 15வது படத்தை ராம்சரணை வைத்து இயக்கி வருகிறார். இவர் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும் தமிழில் இயக்குகிறார். மாதத்தில் சரியாக 15 நாட்கள் இந்த இரண்டு படங்களிலும் வேலை செய்கிறார். மேலும் இந்த படங்கள் விரைவில் முடிவடையும். ஷங்கர் தனது படங்களின் மூலம் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தினார். மேலும் அவரது படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் இன்னும் சில பிரபலங்களின் அடைமொழியாக உள்ளது.
தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய ஒரு திரைப்படம் என்றால் அது பாய்ஸ் திரைப்படம் என்று தான் கூற வேண்டும்.
ஷங்கரின் பல திரைப்படங்கள் சமூகம் சார்ந்த நல்ல விஷயங்களை பேசி இருக்கிறது. பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது., ஆனால் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய சச்சையானது.
அந்த படம் வெளியான போது இந்த படத்தை தடை விதிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் ஒரு கரும்புள்ளி. இந்த படத்தை தமிழ் சினிமா பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையான குரல்கள் எழுந்தன.ஆனாலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை புவனேஸ்வரி. இந்த படத்தில் நடித்த பொழுது இப்படியான காட்சியில் நடிக்க வேண்டுமா..? என்று தயங்கி இருக்கிறார்.தன்னுடைய வயதில் உடைய ஒரு நபர் அல்லது தன்னைவிட அதிக வயதுடைய நபர் என்றால் பரவாயில்லை. கல்லூரி மாணவர்களுடன் இப்படியான காட்சி நடிக்க வேண்டுமா..? என்று யோசித்து இருக்கிறார் புவனேஸ்வரி.
இது குறித்து இயக்குனர் ஷங்கரிடமும் கேட்டிருக்கிறார். இயக்குனர் ஷங்கர் அந்த காட்சியை முழுமையாக விவரித்து இருக்கிறார். கல்லூரி மாணவர்களுடன் அந்த தொழிலில் ஈடுபடும் காட்சி என்றாலும் அவர்களுடைய சுண்டு விரல் கூட உங்கள் மீது படாது அது போல தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தைரியமாக நடியுங்கள் என்று கூறினார்.ஆனால், எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. நிச்சயமாக இந்த கதாபாத்திரத்தில் நடித்து தான் ஆக வேண்டுமா..? என்ற ஒரு எண்ணம் பயம் இருந்து கொண்டே இருந்தது. எனவே, இயக்குனர் மீண்டும் இந்த காட்சி குறித்து என்னிடம் விவரித்தார். அதன் பிறகு தான் அந்த காட்சியில் நடித்தேன் என கூறியிருக்கிறார் நடிகை புவனேஸ்வரி.மேலும் புவனேஷ்வரி வேறு வழியின்றி தொடர்ந்து இதுபோன்ற வேடங்களில் நடித்து வந்தார். மேலும், படங்களில் அபார வசீகரம் காட்டிய புவனேஸ்வரி, பின்னர் மோசமான வழக்கில் சிக்கி சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவள் மீதான களங்கம் இன்று வரை மறையவில்லை.