- Advertisement -
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா தொடர்புடைய சென்னை, கோவை உட்பட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.13) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்குச் சொத்து சேர்த்துள்ளதாகவும், அந்த சொத்து மதிப்பை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் இது தொடர்பாக அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், தற்போது இந்த வழக்கை 2 மாதங்களில் முடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ” கடந்த 2016ல், ரூ .3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ரூ . 16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும்” சற்றுமுன் தகவல் அளித்துள்ளனர்.
- Advertisement -