- Advertisement -
பிரபல லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை நடிகர் விஷால் திரும்பச் செலுத்தாததால் இவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையில் நேரில் ஆஜரான நடிகர் விஷாலிடம், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தது .
மேலும், நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யவும், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதேசமயம், இவர் தாக்கல் செய்யும் போது குறிப்பிட்ட வாங்கி விவரங்கள் முரணாக இருந்தால் எதிர்காலத்தில் படம் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
- Advertisement -