Saturday, September 30, 2023 6:07 pm

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குறித்து ஏ. ஆர். ரஹ்மான் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் அடுத்த படமான நவீன் சந்திராவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இயக்கத்தில் வரவிருக்கும்...

வானத்தை போல சீரியலில் போலீஸ் அதிகாரியாக மாஸ் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ் !

நடிகர் சஞ்சீவ் வெங்கட், முன்பு தினசரி சோப் கிழக்கு வாசலில் காணப்பட்டார்,...

எதிர்நீச்சல் சீரியலில் கோபத்தில் கதிரை கன்னத்தில் அறைந்த ஈஸ்வரி ! அடுத்த ஆதி குணசேகரனாக களமிறங்கும் பிரபலம் !ப்ரோமோ அப்டேட்

'எதிர்நீச்சல்' நல்ல ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப்...

சென்சார் போர்டு விவகாரம் மோடிக்கு மிக்க நன்றி தெரிவித்த விஷால் ! அவரே கூறிய உண்மை

மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்பிற்கு சென்சார் சான்றிதழைப் பெற 6.5 லட்சம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் நேற்று நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்குப் பலர் டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றதாகக் குற்றச்சாட்டை வைத்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து  இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹ்மான் அவர்கள், ” மக்களே..  இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், arr4chennai@btos.in என்ற இ-மெயில் முகவரிக்கு, உங்களின் டிக்கெட் நகலுடன் உங்கள் குறைகளை அனுப்பவும். உங்களது குறைகளை எங்கள் குழு நிவர்த்தி செய்யும்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், அவர் “என்னைச் சிலர் GOAT என அழைப்பார்கள்.. நாம் அனைவரும் விழித்துக்கொள்வதற்கு, இப்போது நானே பலி ஆடாக மாறுகிறேன். இங்கு உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு, சுற்றுலாத்துறையில் முன்னேற்றம், திறன் வாய்ந்த வகையில் கூட்டம் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விதிமுறைகளைப் பார்வையாளர்கள் ஒழுங்காகப் பின்பற்றுதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச திறமைகளை ஊக்குவித்து, கலாச்சார வேட்கையைத் தூண்டுதல், உள்ளிட்ட விஷயங்கள் சென்னையில் நடந்திட வேண்டுகிறேன்” என்றார்.

அதேசமயம், அவர் “ஒரு இசையமைப்பாளராக எனது வேலை, சிறந்த இசை நிகழ்ச்சியைக் கொடுப்பது. மழை மட்டும் பெய்துவிடக் கூடாது, பிற விஷயங்களை ஏற்பாட்டாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற யோசனையில், வெளியில் நடப்பது குறித்துத் தெரியாமல் மகிழ்ச்சியாக பெர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தேன்” எனத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்