Thursday, September 21, 2023 2:43 pm

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டுத் துறை நிதியில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அடுத்த வரும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ராஜமுந்திரியில் உள்ள மத்தியச் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநிலத்தில் இவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  அதன்படி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், தற்போது போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்