- Advertisement -
பிரபல நடிகர் மாரி முத்து (57) இன்று காலை காலமானார். இவர் தனது திரையுலக பயணத்தில் புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றார். அதன்படி, இன்று காலையிலேயே ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேச டப்பிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து. அவருடன் நடிகர் கமலேஷ் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். அப்படி டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே நெஞ்சு வலிப்பதாகச் சொல்லியுள்ளார் மாரிமுத்து. இதனால் மருத்துவமனையில் இவரை அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் இவர் மாரடைப்பால் உயிரிழந்தார் எனத் தெரிவித்தனர். இந்நிலையில், இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -