- Advertisement -
சற்றுமுன் தமிழாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ” தமிழகத்தில் அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை எனச் சனாதனம் மறுத்தவற்றைச் சாத்தியமாக்கியது திமுக அரசு. அதைப்போல், இங்கு ஏழை, எளியோருக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. அதனால்தான் 6வது முறையாக ஆட்சியைக் கொடுத்து அலங்கரித்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்” எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்
மேலும், அவர் அதில்,” கடந்த 2000 ஆண்டுகளாகச் சாதிய பாகுபாடு இருப்பதை RSS தலைவர் மோகன் பகவத்தே ஒப்புக்கொண்டு பேசியுள்ளார். இதற்கு மேலும் உதயநிதி பேசியது பற்றி பாஜகவுக்கு விளக்கம் வேண்டும் என்றால் மோகன் பகவத்தை கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
- Advertisement -