Monday, September 25, 2023 10:12 pm

திமிரு காட்டிய பாலா மேஜையை கோபத்தில் எட்டி உதைத்த அஜித்! ‘நான் கடவுள்’ படத்தின் போது நடந்து என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

இறைவன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

ஜெயம் ரவி நடிப்பில் இம்மாதம் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இறைவன்...

‘லியோ’ படத்தின் விநியோகம் குறித்த வதந்திகளை தயாரிப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்

விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் உள்ளது, மேலும்...

ராம் சரண், ஷங்கர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு பற்றிய வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராம் சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லைகா புரொடக்‌ஷன்ஸ் மூலம் அஜீத் குமாரின் அடுத்த படமான ‘விடயம்யார்ச்சி’ சமூக ஊடகங்களில் அதிக டிரெண்டிங் தலைப்புகளில் ஒன்றாகும். படம் திரைக்கு வருவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வராததாலும் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இருப்பினும், ‘சந்திரமுகி 2’ விளம்பர நிகழ்வின் போது, லைகா தலைவர் சுபாஷ்கரன், ‘விடாமுயற்சி’ தனது நிறுவனத்தின் மதிப்புமிக்க திட்டம் என்றும், அது விரைவில் தொடங்கும் என்றும் ஒரு நல்ல செய்தியை தெரிவித்தார். செப்டம்பர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு இந்தியாவில் 60% துபாயிலும், 30% இந்தோனேசியாவிலும் என மூன்று நாடுகளில் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படம் சமீப காலங்களில் மிகப்பெரிய ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்றும், அஜித் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் ஏராளமான சண்டைகள் மற்றும் கார் மற்றும் பைக் துரத்தல்களை நிகழ்த்துவார் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு நடிகர் உச்சம் பெற்றவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்களை கண்டிப்பாக கடந்துதான் வந்திருக்க வேண்டும். அந்த வகையில் அஜித்திற்கும் அப்படி ஒரு கசப்பான சம்பவம் நான் கடவுள் படத்தின் போது ஏற்பட்டிருக்கிறது.நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித். அந்த நேரத்தில் அஜித் 6 கோடி வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்தாராம். பாலா படம் என்றதும் தனது சம்பளத்தை 2 கோடியாக குறைத்துக் கொண்டாராம். அவருக்கு அட்வான்ஸாக ஒரு தொகையை பாலாவும் மதுரை அன்புவிடம் இருந்து வாங்கி கொடுத்தாராம்.

இந்தப் படத்திற்காக அஜித் மிகவும் நீண்ட தலைமுடியுடன் உடம்பையும் குறைத்துக் கொண்டு இரண்டு மாதமாக காத்துக் கொண்டிருந்தாராம். பாலாவை பொறுத்தவரைக்கும் முழு கதையையும் சொல்லமாட்டாராம். ஒன் லைன் மட்டும் தான் சொல்வாராம்.

இப்படி நாள்கள் நீண்டு கொண்டே போக பாலாவிடம் கதையை கேட்டிருக்கிறார் அஜித். உடனே பாலா என்னிடமே கதையை கேட்கிறாயா? என்ற கோபத்தில் கொடுத்த அட்வான்ஸை வட்டியுடன் கொடுக்கும் படி கறாரா கேட்டாராம்.ஆனால் அஜித் வாங்கிய அட்வான்ஸை வேண்டுமென்றால் கொடுத்து விடுகிறேன். ஆனால் வட்டி எல்லாம் தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார். இப்படி பேச்சு இழுத்து கொண்டே போக கோபத்தில் அஜித் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைச்சு எழுந்து போய்விட்டாராம். அதன் பிறகு வெளியே பணத்தை ஏற்பாடு செய்து பாலாவிடம் பணத்தை கொடுத்தாராம் அஜித். இந்த செய்தியை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறினார்.

‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா, தமன்னா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்