மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் அடுத்த விடாமுயற்சி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிவு வெற்றிக்குப் பிறகு விடாமுயற்சி அறிவிக்கப்பட்டது ஆனால் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன், ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் எங்கள் பெருமைக்குரிய தயாரிப்பு என்று தெரிவித்தார்.
மேலும் செப்டம்பர் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்று நாடுகளில் நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 60% படப்பிடிப்பை துபாயில் நடத்த உள்ளதாகவும் அதன் பிறகு அதிரடி ஆக்சன் காட்சிகளை இந்தோனேசியாவில் படமாக்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஒரு சில காட்சிகளை மட்டும் இந்தியாவில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது . அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தவிர, நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் பகிரப்படவில்லை. நாயகியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவரும் இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய நான்கு படங்களில் நடித்துள்ளனர். த்ரிஷா கிருஷ்ணன் உண்மையில் விடமுயற்சியின் ஒரு பகுதியாக இருந்தால், இது அவருக்கும் அஜித்குமாருக்கும் 5 வது கூட்டணியைக் குறிக்கும்.
விடாமுயர்ச்சி ஒரு அதிரடி ஆக்ஷன் படம். இப்படத்தின் நடிகர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளராகவும், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கோபி பிரசன்னா டிசைன் டீமை கவனிக்கிறார்.