- Advertisement -
இந்தாண்டில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதியன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு பலதரப்பட்ட மக்கள் விநாயகர் சிலையை வாங்கி வைத்துப் பூஜிப்பர். பின்னர் அந்த சிலையை ஆறுகளிலோ, குளங்களிலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகிறது. இந்நிலையில், அப்படி இந்த விநாயகர் சிலையைக் கரைக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்.
அதன்படி, இந்த சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி, பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. நீர்நிலை மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். வர்ணம் பூசுவதற்கு நச்சு வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தக் கூடாது. இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -