- Advertisement -
நாகை மாவட்ட மீனவர்களான 10 பேரைக் கடந்த ஆக .3ஆம் தேதியன்று நடுக்கடலில் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அங்கு 10 மீனவர்களை விசாரித்த பின் நீதிமன்றம் விடுவித்தது . இதனால், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர்.
மேலும், அவர்களைத் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
- Advertisement -