Wednesday, September 27, 2023 2:01 pm

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் : அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் வெளியேற்றத்திற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், பேருந்து நிலையம் திறக்கும் நாள் தள்ளிவைக்கப்பட்டே வருகிறது. தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்க இருக்கிறது.

இதுகுறித்து, தமிழக அமைச்சர் சேகர் பாபு, ” சென்னையில் “மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்துச் சரியான திட்டமிடல் இல்லாமல், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைக் கட்டமைத்துள்ளனர். ஆகவே, தற்போது புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 17 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதை அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், அவர் ” மழைக்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏதுவாக, வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில், முன் அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும், இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்