- Advertisement -
இந்தாண்டு வருகின்ற தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதில் உலகத் தரம் வாய்ப்பு பட்டாசு முதல் உள்ளூர் பட்டாசு வரை கிடைப்பதால் அதிகளவு மக்கள் வருடந்தோறும் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த ஆண்டு வருகின்ற நவம்பர் 12ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12 வரை பட்டாசு விற்பனை செய்யப்படவுள்ளது என்றும், இதற்காக 55 பட்டாசுக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது
- Advertisement -