Wednesday, September 27, 2023 3:18 pm

பாகிஸ்தானில் கோர விபத்து : 18 பேர் உடல் கருகி பலி

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண நிகழ்ச்சியில் நடந்த துயரம் : 100 பேர் பலியான பயங்கர சம்பவம்

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல்...

25வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் : சிறப்பு டூடில் வெளியீடு

உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (செப்.27) தனது...

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நேற்று அதிகாலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று  வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. அப்போது, இந்த பேருந்துக்கு எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியது. அதன் விளைவாகப்  பேருந்தும் வேனும் தீப்பற்றி எரிந்தன.

இதையடுத்து, பேருந்திலிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு பேருந்திலிருந்து இறங்க முற்பட்டனர். ஆனால், அதில் ஒரு சிலரே பேருந்திலிருந்து இறங்க முடிந்தது. மீதம் உள்ளவர்கள் அனைவரும் இறங்க முடியாமல்  தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் உடல் கருகிப் பலியானார்கள். மேலும், 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்