- Advertisement -
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுதும் பரவி மிகப்பெரும் மனித அழிவை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது அந்த வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளது.
அதன்படி, இந்த பிஏ2.86 என மாறியுள்ள இந்த கொரோனா வைரஸை அமெரிக்க நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை மையம் கண்டுபிடித்துள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது தெரியவந்துள்ளது இந்த பரவலால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், இந்த பரவலைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -