- Advertisement -
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அங்கு மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்கான திட்டம் குறித்துப் பேசி வருகிறார். அதில், அவர் ” இந்தியாவில் மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை உலகத்துடன் இணைத்தது கடல். மீன்வளத்துறை சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில், குறிப்பாகத் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியுள்ளோம். கடல் அரிப்பைத் தடுக்க, படகுகளைப் பாதுகாக்கத் தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்” என்றார்.
மேலும், அவர் ” கடல் அரிப்பைத் தடுக்க, படகுகளைப் பாதுகாக்கத் தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது” எனப் பேசி உள்ளார்
- Advertisement -