- Advertisement -
சென்னையின் கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் அடுத்த 4 மாதங்களில் தொடங்கவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 3 நடைமேடை கொண்ட இந்த ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே திட்டம் தீட்டியுள்ளது.
அதற்கு, முதற்கட்டமாக ரூ. 40 லட்சம் நிதியை ரயில்வே நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. வழங்கவுள்ளது . மேலும், இந்த புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், தற்போது பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது
- Advertisement -