- Advertisement -
ஆண் காலையில் எழுந்து குளித்து விட்டு காகத்திற்குச் சாப்பாடு வைக்க வேண்டும், சாப்பாடு என்றால் வடித்த சாதம் தான் என்று அர்த்தம் கிடையாது, பிஸ்கட், மிக்சர் அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருட்கள், வீட்டில் வாங்கி வைத்து தினமும் அந்த உணவு பண்டத்தை காகத்திற்கு வைத்து விட்டு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை வைத்து விட்டு ஒரு நிமிடம் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை மனதில் நினைத்து உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும்.
இந்த ஒரு விசயத்தை ஆண்கள் பின்பற்றி வந்தாலே அந்த குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும், நம் முன்னோர்களின் சாபம், கண்ணுக்குத் தெரியாத தோஷம் மற்றும் நம் முன்னோர்கள் தவறுகளின் காரணமாக வரும் சாபம் இவை அனைத்திலும் இருந்து விடுபட ஆண்கள் செய்யக்கூடிய நல்ல ஒரு சிறந்த பரிகார முறை ஆகும். இது நல்லதொரு பலனைக் கொடுக்கும்.
- Advertisement -