- Advertisement -
சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இன்று (ஆக.14) தொடங்கி வருகின்ற ஆக .20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நேற்று (ஆக .13) நடைபெற்றது. இந்நிலையில், இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
மேலும், இப்போட்டியில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆனால், தற்போது இன்று மாமல்லபுரத்தில் தொடங்கவிருந்த சர்வதேச அலைச் சறுக்குப் போட்டி மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே, இந்த போட்டி நாளை காலை 8 மணிக்கு என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -