- Advertisement -
மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 20ம் தேதியன்று முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் இணை செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இதற்காகச் சென்னையிலிருந்து தொடர் ஜோதி ஓட்டத்தை இன்று (ஆக .15) எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், இந்த மாநாட்டிற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முகத்துடன் கூடிய கோட்டை போன்ற பிரம்மாண்ட முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -