- Advertisement -
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தரக் கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்குச் செல்ல வேண்டும். அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருப்பது உலகிற்குத் தெரியவந்துள்ளது” என்றார்.
மேலும், அவர் ” ஒரு சிறிய உதவி, தன்னம்பிக்கை போதும். நம் தமிழ்நாட்டு மாணவர்கள் அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும். அது கல்வியிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு” எனப் பெருமிதமாக உரையாற்றினார்
- Advertisement -