- Advertisement -
தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதனால் அதன் விலையும் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.
அதன்படி, பழனி தக்காளி மார்க்கெட்டில் நேற்று (ஆகஸ்ட் 7) தக்காளி வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்தது. கடந்த வாரம் 1 கிலோ தக்காளி ரூ.100க்கு விற்ற நிலையில், நேற்று ரூ. 40 ஆக வீழ்ச்சியடைந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -