கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்களில் சில நாட்களாகக் கனமழை பெய்து வந்ததால், கர்நாடகா அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 22,600 கன அடி உபரி நீராக ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து வெளியேற்றப்பட்டது. இதனால், அங்குக் கடந்த புதன்கிழமை முதல் பரிசல் இயக்க தடை விதித்தது அம்மாவட்ட அரசு.
ஆனால், தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6000 கன அடியாகக் குறைந்ததால் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -