மணிப்பூரில் இரண்டு குக்கி இன பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற காணொளி இணையத்தில் வெளியானதிருந்தது. இதையடுத்து, இந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கக்கோரிக் கடந்த வாரம் முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், பல முறை நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 26 கட்சியைச் சேர்ந்த INDIA கூட்டணி மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்திருந்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்துள்ள நிலையில், தற்போது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம். மேலும், ஒன்றிய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது என எதிர்பார்த்து வருகின்றனர்.
- Advertisement -