ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 டெஸ்ட் தொடர், 3 ஒரு நாள் போட்டி, 5 டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கைபற்றிருந்தது, அதைப்போல், நேற்று முன்தினம் முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக இந்திய அணி வென்று இருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு பிரிஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. ஆகவே, இப்போட்டியில் வென்று இந்த தொடரைக் கைப்பற்ற இந்திய அணி ஆர்வம் காட்டி வருகிறது.