மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காகக் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் செய்ய முடிவெடுத்திருந்தது. இந்த தீர்மானத்திற்கு INDIA கூட்டணி சார்பில் உள்ள 26 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்படிக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சபாநாயகர் ஓம் பிர்லா விசாரணைக்கு ஏற்றுள்ளார்.
- Advertisement -