கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”மோடி” என்ற பெயர் குறித்து கடுமையா விமர்சித்து இருந்தார். இந்நிலையில், தற்போது, இந்தாண்டு கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜகவினர், ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் போடப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்து, விசாரித்த சூரத் நீதிமன்ற நீதிபதிகள், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். தற்போது, இந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று (ஜூலை 7) குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது. இந்த தீர்ப்பில், ராகுல் காந்திக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், அவர் தனது எம்பி பதவியைத் திரும்பப்பெறும் வாய்ப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
- Advertisement -